ட்ரெண்டிங்

பழுதான மின் மீட்டர்களை மாற்ற மின்சார வாரியம் உத்தரவு!

பழுதான மின் மீட்டர்களை மாற்ற மின்சார வாரியம் உத்தரவு! 

நுகர்வோரின் வசதிக்காக பழுதான மின் மீட்டர்களை மாற்ற பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக, "வருவாய் மற்றும் தலைமை நிதி கட்டுப்பாட்டாளர் மலர்விழி, தமிழகத்தில் உள்ள மண்டலங்களில் உள்ள தலைமை பொறியாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 10,000- க்கும் மேற்பட்ட மின் மீட்டர்கள் பழுதடைந்துள்ளது. 

எனவே, நுகர்வோரின் வசதிக்காக, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பழுதான மின் மீட்டர்களை மாற்ற வேண்டும். பழுதான மின் மீட்டர்களை மாற்றிய விவரங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பவும்" பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.