ட்ரெண்டிங்

காவலர் பயிற்சிப் பள்ளியில் 54 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு!

மேட்டூர் காவலர் பயிற்சிப் பள்ளியில் ஒரே நேரத்தில் 54 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

சேலம் மாவட்டம், மேட்டூர் காவலர் பயிற்சிப் பள்ளியில் 492 ஆண் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம், விநாயகர் சதுர்த்தி பண்டிகைப் பாதுகாப்புப் பணிக்காக, திருப்பூர், காங்கேயம், கோவை உள்ளிட்டப் பகுதிகளுக்கு பயிற்சிக் காவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

பாதுகாப்புப் பணிகள் முடிந்து மீண்டும் காவலர் பயிற்சிப் பள்ளிக்கு வந்த 54 பயிற்சி காவலர்களுக்கு சளி, காய்ச்சல் பாதுகாப்புக் கண்டறியப்பட்டது. இதில் 14 பயிற்சிக் காவலர்கள், மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

மேலும், 40 காவலர்கள் பயிற்சிப் பள்ளி விடுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட காவலர்களை மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். அத்துடன், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக் குறித்து, மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

 

இதனிடையே, காவலர்களுக்கு டெங்கு மற்றும் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு சாதாரண காய்ச்சலா அல்லது டெங்கு காய்ச்சலா என்பது தெரிய வரும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அ.தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், மருத்துவமனைக்கு சென்று பயிற்சிக் காவலர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.