ட்ரெண்டிங்

நிற்கதியாய் நின்ற குழந்தைகள்....தத்தெடுத்த தன்னார்வ அமைப்பு!

 

சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த குஞ்சாண்டியூர் புதூரைச் சேர்ந்தவர் அழகேசன் (வயது 29)- இளமதி (வயது 25). இந்த தம்பதி தங்களது இரு குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் பண்ணவாடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தனர். 

 

ராமன்நகர் அருகே வந்தபோது அழகேசன் வந்த போது, பின்னால் அதிவேகமாக வந்த லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியது. விபத்தில் இருசக்கர வாகனம் லாரியின் சக்கரத்தில் சிக்கியது. கணவன்- மனைவி இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தைகள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதில் கிஷோருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு முதலுதவி சிகிச்சைக் கொடுக்கப்பட்ட பின், சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் பூரண நலத்துடன் குழந்தை கிஷோர் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். 

 

எனினும், ஏழ்மை காரணமாக, குழந்தைகளை வளர்த்து வரும் அவர்களது உறவினர்கள் செய்வதறியாது தவித்து வந்தனர். குழந்தைகள் நிற்கதியாய் நிற்பதை அறிந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மக்களின் சேவகன் அறக்கட்டளை,பெற்றோரை இழந்த இரண்டு குழந்தைகளையும் தத்தெடுப்பதாகவும், முழு செலவையும் ஏற்பதாக அறக்கட்டளையின் நிறுவனர் மோகன் அறிவித்துள்ளார்.