ட்ரெண்டிங்

பண்ணவாடி பரிசல் துறையில் 10 கிலோ எடையுள்ள வாள் மீன் சிக்கியது!

சேலம் மாவட்டம், பண்ணவாடி பரிசல் துறையில் மீனவர்கள் பரிசலில் சென்று மீன் பிடித்து வருகின்றனர். வழக்கமாக மீனவர்கள் வலையில் சிறிய வகையான வாள்மீன்கள் மட்டுமே சிக்கும். ஆனால், நேற்று (செப்.28) சுமார் 10 கிலோ எடையுள்ள மிகப்பெரிய வாள் மீன் சிக்கியது. இதைப் பார்த்த சக மீனவர்கள் வியப்படைந்தனர்.

 

அந்த மீனைப் பிடித்த மீனவர், கரைக்கு திரும்பி, தான் பிடித்த மிகப்பெரிய வாள் மீனை பொதுமக்கள் மற்றும் மீனவர்களுக்கு காண்பித்து மகிழ்ந்தார். இந்த மீன் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை ஆகும் என்று மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

பண்ணவாடி பரிசல் துறையில் பிடிக்கப்படும் மீன்கள், சேலம் மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கும், நாமக்கல், ஈரோடு, கரூர், கோவை ஆகிய மாவட்டங்களுக்கும் விற்பனைக்காகக் கொண்டு செல்லப்படுகின்றன.