ட்ரெண்டிங்

ஏற்காட்டில் மலர்கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரம்! 

சேலம் ஏற்காட்டில் மலர்கண்காட்சி மற்றும் கோடை விழாவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர். 

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்காவில் கண்கவர் மலர்கண்காட்சி மற்றும் கோடை விழா நடைபெறவுள்ளது. இதற்காக 15,000 தொட்டிகளில் 26 வகையான மலர்கள் நடவுச் செய்யப்பட்டுள்ளன. இதேபோல், ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா ஆகிய இடங்களில் 6,000 பூந்தொட்டிகளில் மலர்கள் நடவுச் செய்யப்பட்டு கண்காட்சிக்காக தயார் செய்யப்பட்டு வருகிறது. 

மே மாத இறுதியில் கோடைவிழா மற்றும் மலர்க்கண்காட்சி நடத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதனிடையே, கோடைவிடுமுறையை முன்னிட்டு, சுற்றுலாப் பயணிகள் சேலம் ஏற்காட்டில் குவிந்து வருகின்றனர்.