ட்ரெண்டிங்

கர்நாடகா முதலமைச்சரைச் சந்தித்து மனு அளித்த மேட்டூர் எம்.எல்.ஏ.!

தமிழக எல்லையோர கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துத் தரக்கோரி, கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையாவிடம் பா.ம.க.வைச் சேர்ந்த மேட்டூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் சதாசிவம் கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.

 

கர்நாடகா மாநிலம், மாதேஸ்வரன் மலையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் சித்தராமையாவைச் சந்தித்து மேட்டூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.

 

அதில், கர்நாடகா- தமிழகம் எல்லையான செங்கப்பாடி, கோபிநத்தம் பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் கொடுத்துள்ளார்.

 

கோரிக்கை மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் சித்தராமையா உறுதியளித்ததாக மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவம் தெரிவித்துள்ளார்.