ட்ரெண்டிங்

கோயில் நிர்வாகியைத் தாக்கிய தலைமைக் காவல் அதிகாரி!

சேலம் மாவட்டம், பரியம்பட்டி கிராமத்தில் கோயில் நிர்வாகியைத் தாக்கிய தலைமைக் காவல் அதிகாரியை கைது செய்ய வலியுறுத்தி, அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.  

 

கோயில் கூடாரம் அமைக்கும் விவகாரத்தில் தலைமைக் காவலர் முருகன் மற்றும் அவரது மகன்கள் கோயில் நிர்வாகி ரமேஷ் என்பவரைக் கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. படுகாயமடைந்த கோயில் நிர்வாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

 

கோயில் நிர்வாகியத் தலைமைக் காவலர் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, காவலரை கைது செய்ய வலியுறுத்தி, அவரது மனைவி காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்றார்.

 

இதனை தடுத்து நிறுத்தி, அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக, காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.