ட்ரெண்டிங்

இன்றே ஆட்சியமைக்க உரிமைக் கோருகிறது பா.ஜ.க.?

மத்தியில் அரசு அமைக்க குடியரசுத் தலைவரைச் சந்தித்து இன்றே நரேந்திர மோடி உரிமைக் கோரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, டெல்லியில் உள்ள இல்லத்தில் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், முதலமைச்சர் நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

கூட்டத்தில், இன்றே ஆட்சியமைக்க உரிமைக் கோருவது என்று முடிவுச் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் கூட்டத்திற்கு பின் குடியரசுத்தலைவரை சந்திக்க முடிவுச் செய்துள்ள பா.ஜ.க. கூட்டணி தலைவர்கள், ஆட்சியமைக்க உரிமைக் கோருகின்றனர்.