ட்ரெண்டிங்

ஓமலூரில் இருந்து திருச்செங்கோடு வரை அமைக்கப்படும் சாலை தரமற்று இருப்பதாக மக்கள் குற்றச்சா

சேலம் மாவட்டம், ஓமலூரில் இருந்து திருச்செங்கோடு வரை அமைக்கப்படும் நான்கு வழிச்சாலை தரமற்று இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

சுமார் 450 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் இந்த சாலைப் பணிகள் மந்தமாக நடைபெறுவதாகக் கூறும் அப்பகுதி மக்கள் தரைப்பாலம் அமைக்கும் பணி ஒரு வருடக் காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் வாகனவோட்டிகள் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறுகிறார்கள்.

 

மேலும், பழைய சாலையை அகற்றாமல், அதன் மேலே புதிய சாலை அமைப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், மழைக்காலம் என்பதால் சாலைப் பணிகள் மெதுவாக நடைபெறுவதாகவும், சாலைகள் தரமாக அமைக்கப்படும் என்று உறுதியளித்தனர்.