ட்ரெண்டிங்

சேலம் வழியாக கொல்லம்- செகந்திராபாத் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு!

 

சேலம் வழியாக கொல்லம் - செகந்திராபாத் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. 

 

இது குறித்து சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கொல்லம்- செகந்திராபாத் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, நாளை (நவ.21) அதிகாலை 02.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் (நவ.22) காலை 10.00 மணிக்கு செகந்திராபாத்தைச் சென்றடையும். 

 

இந்த சிறப்பு ரயில், கோட்டயம், எர்ணாகுளம், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, குண்டூர், நெல்லூர், விஜயவாடா உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவுத் தொடங்கப்பட்டுள்ளது." இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.