ட்ரெண்டிங்

மழையால் சேலம் மாநகரம் குளிர்ந்தது! 

சேலம் மாவட்டத்தில் பரவலாகப் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

சேலம் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவிற்கு வெப்பநிலை பதிவாகி வந்த நிலையில், சட்டென்று மாறிய வானிலை என்ற கூற்றுக்கு ஏற்றார் போல், கடந்த சில நாட்களாக கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

அதன் தொடர்ச்சியாக, இன்று (மே 14) மதியம் 02.00 மணியளவில் சேலம் மாநகரத்தில் வின்சென்ட், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, பொன்னம்மாப்பேட்டை, பட்டைக்கோவில், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், தாதகாப்பட்டி கேட், கிச்சிப்பாளையம், கந்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை பரவலாக மழை பெய்தது.