ட்ரெண்டிங்

மேட்டூர்- பாலாறு சாலையில் அடிக்கடி ஏற்படும் மண்சரிவு!

மேட்டூரில் இருந்து பாலாறு செல்லும் பாதையில் பாறைகள் சரிந்து விழுவதால் விபத்துகள் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

 

சேலம் மாவட்டம், மேட்டூர்- மைசூரு நெடுஞ்சாலையில் காரைக்காடு முதல் பாலாறு சோதனைச்சாவடி வரை சுமார் 5 கிலோ மீட்டருக்கு சென்னம்பட்டி வடப்பகுதியை ஒட்டி, தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. சில தினங்களாக இந்த பகுதியில் பெய்து வரும் கனமழையால், அவ்வப்போது மண் சரிவு ஏற்படுவதுடன் பாறைகளும் சாலையில் உருண்டு விழுகின்றன.

 

இதனால் இப்பகுதி வழியாகப் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்துடனே கடக்கும் சூழல் ஏற்படுகிறது. எனவே, சாலையில் கிடக்கும் பாறைகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.