ட்ரெண்டிங்

சேலம் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை! 

சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக சுமார் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டிற்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. இந்த நிலையில், கத்திரி வெயிலும் தொடங்கி பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக, வரலாறு காணாத அளவில் வெப்பநிலையானது பதிவாகி வந்தது. 

இந்த சூழலில், நேற்றிரவு (மே 06) சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. ஏற்காடு, காடையாம்பட்டி, எடப்பாடி, அம்மாப்பேட்டை, மேட்டூர், 5 ரோடு, சாரதா கல்லூரி, அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

குறிப்பாக, நான்கு மாதங்களுக்கு பிறகு சேலம் மாநகரில் பலத்த மழை பெய்துள்ளது. வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுகிறது.