ட்ரெண்டிங்

விளைப்பொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருப்பு வைக்க விவசாயிகளுக்கு அழைப்பு!

சேலம் மாவட்டம், ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களது விளைப் பொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருப்பு வைத்துக் கொள்ள விவசாயிகளுக்கு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

 

நிலக்கடலை, மஞ்சள், பருத்தி உள்ளிட்ட விளைப்பொருட்களை ஒழுங்குமுறைக் கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்துக் கொள்ளலாம் எனவும் விற்பனைக் கூடத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் தேசிய வேளாண் சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில், விளைப்பொருட்களுக்கு இங்கு கூடுதல் விலை கிடைப்பதாக ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் ஆனந்தி தெரிவித்துள்ளார்.