"இரண்டரை ஆண்டு திராவிட ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் சொல்லுங்கள்" என்று தி.மு.க. தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "ஒவ்வொருவரும் தி.மு.க. அரசால் பெற்ற பலன்களை மக்களுக்கு உணர்த்த வேண்டும்; ஸ்பெயினில் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் சந்திப்புகள் பயணத்தின் வெற்றிக்கு கட்டியம் கூறுகின்றன. மக்களைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க.வின் வெற்றியை தொண்டர்கள் உறுதிச் செய்ய வேண்டும்.அடுத்து இந்தியா கூட்டணி தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் மாநில உரிமைகள், நலன்கள் பாதுகாக்கப்படும்.
இரண்டரை ஆண்டு திராவிட ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் சொல்லுங்கள்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.