விளையாட்டு

ஓமலூரில் மாநில அளவிலான ஜூனியர் சாஃப்ட் டென்னிஸ் போட்டி!

சேலம் மாவட்டம், ஓமலூரில் மாநில அளவிலான ஜூனியர் சாஃப்ட் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பகல், இரவு ஆட்டங்களாக நடைபெற்று வரும் இந்த போட்டிகளில், கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 280 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

 

அரையிறுதிப் போட்டியில், கடலூர், வேலூர், திருப்பூர், சேலம் உள்ளிட்ட அணிகள் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் வருகிற அக்டோபர் 15- ஆம் தேதி அன்று ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கத் தகுதி பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.