ட்ரெண்டிங்

17 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்த திருமணமான பெண்!

17 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்த திருமணமான பெண்! 

சேலம் மாவட்டம், அன்னதானப்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், அதே பகுதியில் உள்ள வெள்ளிப்பட்டறை ஒன்றில் வேலைச் செய்து வந்துள்ளான். இந்த கடந்த ஆகஸ்ட் 14- ஆம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்ற சிறுவன், இரவு வீடு திரும்பவில்லை. 

இதனால் பதறிப்போன சிறுவனின் பெற்றோர், சிறுவனின் தொலைபேசி எண்ணை தொடர்புக் கொண்டுள்ளனர். எனினும், தொலைப்பேசி எண் அணைத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிந்தது. இதையடுத்து, சிறுவன் வேலைச் செய்யும் வெள்ளிப்பட்டறைக்கு சென்றுப் பார்த்துள்ளனர். அங்கும் சிறுவன் இல்லாத நிலையில், சிறுவனின் நண்பர்களின் வீடுகள், உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுப் பார்த்துள்ளனர் சிறுவனின் பெற்றோர். 

இருப்பினும், சிறுவன் கிடைக்காத நிலையில், அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில், அதே வெள்ளிப்பட்டறையில் 21 வயது பெண்ணும் அன்றைய தினம் காணாமல் போனதும், அந்த பெண்ணின் கணவன் தேடி அலைந்ததும் காவல் துறையினருக்கு தெரிய வந்தது. 

17 வயது சிறுவனுடன் 21 வயது பெண் ஓடியதை காவல்துறையினர் உறுதிச் செய்தனர். இது குறித்து காவல்துறையினர், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சிறுவனுடன் திருமணமான பெண் ஓடிய சம்பவம், அன்னதானப்பட்டி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.