ட்ரெண்டிங்

விவசாய கிணற்றில் இருந்து நீர்நாய் மீட்பு!

காடையாம்பட்டியில் உள்ள விவசாயக் கிணற்றில் இருந்து நீர்நாய் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.

 

சேலம் மாவட்டம்,மேட்டுக்காட்டில் உள்ள விவசாயக் கிணற்றில் அரிய விலங்கு ஒன்று இருப்பதாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில், அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், அது நீர்நாய் என்பதை உறுதிச் செய்தனர்.

 

பின்னர், கிணற்றில் இருந்த தண்ணீர், மோட்டார் மூலம் முழுவதும் வெளியேற்றப்பட்டு, நீர்நாய் பிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நீர்நாயைக் கூண்டில் அடைத்த தீயணைப்பு வீரர்கள், பின்னர், வனத்துறை அதிகாரிகளிடம் நீர்நாயை ஒப்படைத்தனர்.

 

நீர்நாயை காண சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து இளைஞர்கள், பொதுமக்கள், கிணற்றுக்கு அருகே குவிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.