ட்ரெண்டிங்

நமக்கு நாமே திட்டம்-மேயரிடம் காசோலையை வழங்கிய மாமன்ற உறுப்பினர்!

சேலம் மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 3 லட்சத்துக்கு 50 ஆயிரத்துக்கான காசோலையை சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் இ.ஆ.ப. ஆகியோரிடம் அம்மாப்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட 37-வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருஞானம் பொதுமக்கள் சார்பாக வழங்கினார்.

 

இந்த நிதியுடன், சேலம் மாநகராட்சியும் தனக்கு பங்களிப்புத் தொகையை வழங்கி, 37-வது வார்டில் எந்த தெருவில் சாக்கடை, குடிநீர் குழாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லையோ, அவற்றை இந்த நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்களின் பங்களிப்புடன் தமிழ்நாடு அரசு செய்து தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.