ட்ரெண்டிங்

மாட்டுச் சந்தையில் பசு மாடுகளை விட எருமை மாடுகள் அமோக விற்பனை!

மாட்டுச் சந்தையில் எதிர்பாராத விதமாக எருமை மாடுகள் அதிகம் விற்பனையானதால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே புகழ்பெற்ற மாட்டுச் சந்தை உள்ளது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று கூடும் இந்த சந்தைக்கு, தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து கால்நடைகள் விற்பனைக்கு வருகின்றன.

 

அந்த வகையில், இன்று (செப்.15) புகழ்பெற்ற மாட்டுச் சந்தைக் கூடியது. வழக்கத்திற்கு மாறாக, பசு மாடுகளை விட எருமை மாடுகள் அதிகம் விற்பனையாகின. மேலும், நாட்டு மாட்டுக் கன்றுகள், கறவை மாடுகள் உள்ளிட்டவை விற்பனையான நிலையில், நாளின் முடிவில் 4 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.