ட்ரெண்டிங்

கார் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு!

கார் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு! 

சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள முல்லைவாடி அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 42). கூலித்தொழிலாளியான இவர், தனது 16 வயது மகனுடன் மொபட் என்ற சிறிய வகை பேட்டரி வாகனத்தில் அம்மம்பாளையத்திற்கு சென்று விட்டு, வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். 

அப்போது, முல்லைவாடி பகுதியில் வந்துக் கொண்டிருந்த கார் ஒன்று சரவணனின் மொபட் மீது மோதியுள்ளது. இதில் வாகனத்தில் இருந்து இருவரும் தூக்கி வீசப்பட்டனர். சாலையில் சென்றவர்கள், அவர்களை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். 

எனினும், சரவணன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது மகன் கௌதமுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். 

விபத்து குறித்து தகவலறிந்த ஆத்தூர் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.