ட்ரெண்டிங்

குழந்தையைக் கடத்த முயன்ற இளைஞரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்!

பெண் குழந்தையைக் கடத்த முயன்ற வட மாநில இளைஞரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். 

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், கோட்டை மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த பாலமூர்த்தி என்பவரின் குழந்தையை வட மாநில இளைஞர் கடத்திச் சென்று ஓடியுள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர், அந்த இளைஞரைப் பின் தொடர்ந்தனர். இதனால் அந்த இளைஞர் பெண் குழந்தையை கீழே வைத்து விட்டு ஓடியுள்ளார். 

ஆனால் அவரை பின் தொடர்வதை விடாத மக்கள், இளைஞரை மடக்கிப் பிடித்தனர். அத்துடன், அந்த இளைஞரை அடித்து கட்டி வைத்த பொதுமக்கள், காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.