ட்ரெண்டிங்

எந்தெந்த பகுதிகளில் நாளை மின்தடை?- விரிவாகப் பார்ப்போம்!

சேலம் மாவட்டம், நங்கவள்ளி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு காரணமாக, நங்கவள்ளி, வனவாசி, வீரக்கல், சூரப்பள்ளி, குட்டப்பட்டி, சோரகை, மானாத்தாள், குப்பம்பட்டி, சீரங்கனூர், மல்லிக்குட்டை, பைப்பூர், பெரிய வனவாசி, சாணாரப்பட்டி, தானாவதியூர், செல்லக்கல் ஆகிய பகுதிகளில் நாளை (ஜூலை 13) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், கே.ஆர்.தோப்பூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், அலையனூர், மாரமங்கலத்துப்பட்டி, கோணகாபாடி, காரைச்சாவடி, முத்துநாயக்கன்பட்டி, கலர்பட்டி, செம்மண்கூடல், பாகல்பட்டி, கே.ஆர்.தோப்பூர், அழகுசமுத்திரம், கருக்கல்வாடி, கிருஷ்ணம்புதூர், குயவனூர், கரியாம்பட்டி, தோலூர், இரும்பாலை, மோகன் நகர், தெசவிளக்கு, ஓம்சக்தி நகர், மாட்டையாம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (ஜூலை 13) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.