ட்ரெண்டிங்

கிச்சிப்பாளையம் வாழப்பாடி பகுதிகளில் நாளை மின்விநியோகம் இருக்காது என அறிவிப்பு!

சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையம், வாழப்பாடி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (செப்.13) மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

அதன்படி, வாழப்பாடி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட சிங்கபுரம், வாழப்பாடி, பெரியகிருஷ்ணாபுரம், கொட்டவாடி, துக்கியாம்பாளையம், அத்தனூர்பட்டி, பேளூர் முத்தம்பட்டி, மண்நாயக்கன்பட்டி, திம்மநாயக்கன்பட்டி, மேற்கு ராஜாபாளையம், புதுப்பாளையம், பழனியாபுரம், மன்னார்பாளையம், மங்களபுரம், பளத்தானூர், சந்திரபிள்ளைவலசு, நடுப்பட்டி, மத்தூர் ஆகிய பகுதிகளில் நாளை (செப்.13) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல், கிச்சிப்பாளையம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட சேலம் தாதுபாய்க்குட்டை, கடைவீதி, பழைய பேருந்து நிலையம், கோட்டை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை, செவ்வாய்பேட்டையின் ஒரு பகுதி, அக்ரஹாரத்தின் ஒரு பகுதி, மேட்டுத்தெரு, செரிரோடு, பிரட்ஸ்ரோடு, மரக்கடை வீதி, கருங்கல்பட்டி, களரம்பட்டி, பில்லுக்கடை, குகை, எருமாபாளையம், சீலநாயக்கன்பட்டி, தாசநாயக்கன்பட்டி, தாதகாப்பட்டி, கிச்சிப்பாளையம், சன்னியாசிக்குண்டு, நாராயண நகர், பொன்னம்மாபேட்டையின் ஒரு பகுதி, பட்டைக்கோயில், டவுன் ரயில்வே ஸ்டேஷன், நான்கு ரோட்டின் ஒரு பகுதி, லைன்மேடு, வள்ளுவர் நகர், அன்னதானப்பட்டி, புது திருச்சி கிளை ரோடு, திருச்சி ரோடு, சங்ககிரி ரோடு ஆகிய பகுதிகளில் நாளை (செப்.13) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.