ட்ரெண்டிங்

உலக எய்ட்ஸ் தினம்- சேலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!

 

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, இன்று (டிச.01) காலை 11.00 மணிக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், எய்ட்ஸ் விழிப்புணர்வுக் குறித்த உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தலைமையில் அரசுத்துறை அலுவலர்கள், பள்ளி மாணவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

 

அதைத் தொடர்ந்து, எய்ட்ஸ் விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணியை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தொடங்கி வைத்தார். பேரணியில் கலந்து கொண்டவர்கள், விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்தியும், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

 

இந்த நிகழ்ச்சியில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சௌண்டம்மாள், குடும்ப நல துணை இயக்குநர் வளர்மதி, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்ட மேலாளர் அருணாசலம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.