ட்ரெண்டிங்

வாழப்பாடி அருகே கள்ளச்சாராயம் விற்பனை என குற்றச்சாட்டு!

வாழப்பாடி அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 

சேலம் மாவட்டம்,  வாழப்பாடி அருகே உள்ள கல்வராயன் மலைத்தொடர் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர் வீட்டில்  கள்ளச்சாராயம், மதுபானங்களைப் பதுக்கி வைத்து, வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல் உள்ளிட்டப் பகுதிகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், மக்கள் வசிக்கும் பகுதியில் அச்சுறுத்தும் வகையில், மதுப்பிரியர்கள் மது அருந்தும் காட்சியும் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இது குறித்து காவல்துறையினரும், கள்ளச்சாராய தடுப்புப் பிரிவினரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.