ட்ரெண்டிங்

அரசுப் பேருந்து லாரி மீது மோதி விபத்து!

இன்று (செப்.11) அதிகாலை விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகக் கோட்டத்திற்கு சொந்தமான பேருந்து ஒன்று சென்னையில் இருந்து சேலம் நோக்கி வந்துக் கொண்டிருந்தது. அப்போது, ஆத்தூரை அடுத்த வாழப்பாடியைத் தாண்டிய நிலையில், மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி அருகே அரசுப் பேருந்து லாரியின் பின்புறம் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளாது. 

இந்த விபத்தில், அரசுப் பேருந்தின் முன் பக்க கண்ணாடி சேதமடைந்த நிலையில், பேருந்தில் பயணம் செய்தவர்களில் நான்கு பேர் படுகாயமடைந்தனர். பின்னர், பேருந்து சாலையோரம் நிறுத்தப்பட்டு, அதில் இருந்த பயணிகள் வேறு பேருந்துக்கு மாற்றப்பட்டு, சேலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாழப்பாடி காவல்துறையினர், வழக்குப்பதிவுச் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்து காரணமாக, சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.