ட்ரெண்டிங்

வாழைத்தார்கள் அதிக விலைக்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி!

சேலம் மாவட்டம், வாழப்பாடி பேரூராட்சியில் நான்கு தனியார் காய்கறி கமிஷன் மண்டிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மண்டிகளுக்கு நேற்று (செப்டம்பர் 01) வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், புழுதிகுட்டை, கருமந்துறை, அத்தனூர்பட்டி, தும்பல், தூக்கியாம்பாளையம், சின்ன கிருஷ்ணாபுரம், பொன்னாரம்பட்டி உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் வாழைத்தார்களை அதிகளவில் கொண்டு வந்திருந்தனர். 

அந்த வாழைத்தார்கள் ரூபாய் 250 முதல் ரூபாய் 500 வரை விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "கடந்த சில நாட்களாக வாழைத்தார்களின் விலை ஏற்றம் கண்டுள்ளது. சுப முகூர்த்த நாட்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்டப் பண்டிகைகள்  அடுத்தடுத்து வரவிருப்பதால், வாழைத்தார்களின் விலை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்" என்று கூறுகின்றனர்.