ட்ரெண்டிங்

கணவர் கண்டித்ததால் தற்கொலைச் செய்துக் கொண்ட மனைவி!

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள அப்பமசமுத்திரம் கிராமம் பள்ளிக்கூடத் தெருவில் வசித்து வரும் தம்பதி துரைராஜ் -நித்யா (வயது 30). இந்த தம்பதிக்கு கவுதமதேவி (வயது 10) என்ற மகளும், கவுசிக் (வயது 8) என்ற மகனும் உள்ளனர். இந்த தம்பதி கட்டிட வேலையைச் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் நித்யா அடிக்கடி தொலைபேசியில் வேறொரு நபருடன் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதை அவரது கணவரான துரைராஜ் பலமுறைக் கண்டித்துள்ளார். எனினும், பேசுவதை நிறுத்தாத நித்யா, கடந்த செப்.08- ஆம் தேதி அன்று அந்த நபருடன் மீண்டும் தொலைபேசியில் பேசியுள்ளார். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த துரைராஜ், மனைவி நித்யாவை அடித்து உதைத்துள்ளார். 

இதனால் மனமுடைந்த நித்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நள்ளிரவில் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்டார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆத்தூர் புறநகர் காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அத்துடன் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கணவர் துரைராஜிடம் தீவிர மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், நித்யாவின் செல்போனையும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.