ட்ரெண்டிங்

சபரிமலை செல்லும் பயணிகளின் கவனத்திற்கு....சிறப்பு ரயில் அறிவிப்பு!

 

சபரிமலை செல்லும் பயணிகளின் வசதிக்காக, சென்னை சென்ட்ரலில் இருந்து எர்ணாகுளத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. 

 

இது குறித்து சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, சென்னை சென்ட்ரல்- எர்ணாகுளம் இடையே இன்று (நவ.20) சிறப்பு ரயில் இயக்கப்படும். 

 

இன்றிரவு 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில், நாளை (நவ.21) பகல் 11.55 மணிக்கு எர்ணாகுளத்தைச் சென்றடையும்; இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை ,சேலம், ஈரோடு, போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவுத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.