ட்ரெண்டிங்

ரூபே கார்டு வாடிக்கையாளர்களுக்கான அதிரடி அறிவிப்பு! 

ரூபே கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை வைத்திருப்பவர்கள் வெளிநாடுகளில் பொருட்களை வாங்கும் போது 25% கேஷ்பேக் சலுகை பெறலாம் என இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அறிவித்துள்ளது. 

கனடா, ஜப்பான், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய 7 நாடுகளில் ரூபே கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. 

வரும் மே 15- ஆம் தேதி முதல் ஜூலை 31- ஆம் தேதி வரை வாடிக்கையாளர்கள் பாயிண்ட் ஆஃப் சேல்-ஐ பயன்படுத்தி குறிப்பிட்ட நாடுகளில் பொருட்களை வாங்கும் போது 25% கேஷ்பேக் சலுகையைப் பெறலாம் என்று NPCI அறிவித்துள்ளது. 

சலுகை அறிவிக்கப்பட்ட காலத்தில் ரூபே கார்டைப் பயன்படுத்தி ஒவ்வொரு முறையும் பாயிண்ட் ஆஃப் செல் மூலமாகப் பொருட்களை வாங்கும் போது, அதிகபட்சமாக ரூபாய் 2,500 கேஷ்பேக் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியர்கள் உள்நாட்டில் உள்ள பண அட்டைகளைப் பயன்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல் படி, இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் ரூபே கார்டுகளை அறிமுகப்படுத்தியது.