ட்ரெண்டிங்

ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை!

ஓமலூர் அருகே ஏரிகள் இணைப்புத் திட்டத்தின் கீழ் தண்ணீர் செல்லும் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள டி.மாரமங்கலம் கிராமத்தில் உள்ள ராமகிருஷ்ணனூர் ஓடைக்கு செல்லும் நீர் வழிப்பாதையை ஆக்கிரமிப்புச் செய்து மண் சாலை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கில், ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை எனத் தெரிகிறது. 

 

இந்த நிலையில், ஓடையை மற்றொரு தரப்பினர் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, வட்டாட்சியரிடம் மனு அளித்துள்ள விவசாயிகள், பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.