ட்ரெண்டிங்

சாலையில் தேங்கியுள்ள நீரில் மீன்பிடித்து மக்கள் போராட்டம்!

குண்டும், குழியுமாக உள்ள சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் மக்கள் மீன்பிடித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த கெங்கவல்லி அருகே உள்ள கூடமலை ஊராட்சியில் இருந்து நினங்கரை வரை கடந்த 15 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ள சாலைகளைச் சீர் செய்ய பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

மழைக்காலங்களில் சாலைகளில் குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். 

இதனைக் கண்டித்து, சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் வலையைக் கொண்டு மீன்பிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சாலையை உடனடியாக சீரமைப்புத் தர சேலம் மாவட்ட நிர்வாகத்துக்கு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.