ட்ரெண்டிங்

மேம்பாலத் தூண்களில் வண்ணமிகு ஓவியங்கள்!

மேம்பாலத் தூண்களில் ஓவியங்களை வரைந்து அழகுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

சேலம் மாநகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், பல்வேறு மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இதனிடையே, பாலத்தின் தூண்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பாலங்கள் பொலிவிழந்து, அலங்கோலமாகக் காட்சியளித்தன. 

இது குறித்து ஜஸ்ட் நவ் சேலம் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், இதனை மீட்டெடுக்கும் முயற்சியாக மேம்பாலத் தூண்களில் தனியார் பங்களிப்புடன் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு அழகாகக் காட்சியளிக்கின்றன. கலாச்சாரம், பாரம்பரியம், வரலாற்று நிகழ்வுகள், தலைவர்களின் படங்களுடன் வரையப்படும் ஓவியங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்புக் கிடைத்துள்ளது. 

வண்ண ஓவியங்களுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாசகங்களும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.