ட்ரெண்டிங்

குடும்பத்துடன் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி! 

வாக்குச்சாவடி மையத்திற்கு குடும்பத்துடன் சென்று வாக்களித்தார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. 

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், முதல்முறை வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம், சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு குடும்பத்துடன் சென்று வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.   

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "அனைவரும் தவறாமல் வந்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.