ட்ரெண்டிங்

சாலை விபத்தில் தம்பதி உயிரிழப்பு!

 

சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த குஞ்சாண்டியூர் புதூரைச் சேர்ந்த தம்பதி அழகரசன் (வயது 30)- மனைவி இளமதி (வயது 25). அழகரசன் தனது மனைவி மற்றும் குழந்தைகளான கிஷோர் (வயது 5), கிருத்திக் (வயது 2) ஆகியோரை அழைத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் பண்ணவாடியில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

ராமன்நகர் அருகே அழகரசன் வந்த போது, பின்னால் அதிவேகமாகவும், ஹாரன் அடிக்காமலும் கர்நாடகா மாநிலத்திலிருந்து நெல் மூட்டை ஏற்றிக் கொண்டு வந்த லாரி மீது மோதியது. இதில் இருசக்கர வாகனம் லாரியின் சக்கரத்தில் சிக்கியது. கணவன், மனைவி இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


குழந்தைகள் இருவரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த கருமலைக்கூடல் காவல்துறையினர், தம்பதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்துக் காரணமாக, மேட்டூர்- மேச்சேரி சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.