ட்ரெண்டிங்

தலைவாசல் துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்புப் பணி! 

சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து துணை மின்நிலையங்களிலும் மாதந்தோறும் மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நாளில், துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டு, பழுதான வயர்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்களை மின்ஊழியர்கள் மாற்றி வருகின்றனர். 

அந்த வகையில், சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த தலைவாசல் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், ஆறகளூர், ஆரத்தி அகரம், கோவிந்தபாளையம், வேப்பம்பூண்டி, புளியங்குறிச்சி, சித்தேரி, பெரியேறி, நத்தக்கரை, தலைவாசல், இலுப்பநத்தம், சாத்தப்பாடி, சார்வாய், தென்குமரை, தேவியாக்குறிச்சி, மணிவிழுந்தான் காலனி, மணிவிழுந்தான் வடக்கு, மணிவிழுந்தான் தெற்கு, பட்டுத்துறை, நாவக்குறிச்சி, சிறுவாச்சூர், ஊனத்தூர், புத்தூர், நாவலூர், தியாகனூர், காமக்காபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 28) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.