ட்ரெண்டிங்

மனைவியை சாதிப் பெயரைச் சொல்லித் திட்டிய கணவன் கைது!

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள கே.ஆர்.தோப்பூரைச் சேர்ந்தவர் கீர்த்திகா (வயது 23). இந்த பெண் அதே பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் (வயது 27) என்பவரை காதலித்துத் திருமணம் செய்துக் கொண்டார். கஜேந்திரன் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர். கடந்த 2022- ஆம் ஆண்டு திருமணமான நிலையில், கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கீர்த்திகா தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். 

இதற்கிடையே, கஜேந்திரன் விவாகரத்துக் கோரி சேலம் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில், கஜேந்திரனுக்கு வேறுறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றதாக கீர்த்திகாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, தனது தந்தையை அழைத்துக் கொண்டு கஜேந்திரன் வீட்டிற்கு சென்று கீர்த்திகா நியாயம் கேட்டுள்ளார். 

அப்போது, கீர்த்திகா மற்றும் அவரது  தந்தையை சாதி பெயர் சொல்லி கஜேந்திரன் திட்டியுள்ளார். இதையடுத்து, கீர்த்திகா தாரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், கஜேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.