ட்ரெண்டிங்

பேருந்திற்காக பயணிகள் வெயிலில் காத்திருக்க வேண்டிய சூழல்!

சேலம் அருகே பேருந்து நிலையம், வாகனம் நிறுத்தும் கூடாரமாக மாறியுள்ளதால் பயணிகள் சிரமம் அடைந்தனர். 

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளி பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, சமீபத்தில் பெரிய அளவில் நிழற்கூடம் அமைக்கப்பட்டது. பல  லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நிழற்கூடம், கார் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்தும் கூடாரமாக மாறியதால் பயணிகள் நிற்க இடமின்றி, பேருந்து நிலையத்திற்கு வெளியே காத்திருக்க வேண்டிய சூழல் நீடித்து வருகிறது. 

இதன் காரணமாக, பயணிகள் மட்டுமின்றி, பேருந்து ஓட்டுநர்களும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனை அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.