ட்ரெண்டிங்

இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியிடம் கொள்ளையடித்த அடையாளம் தெரியாத நபர்கள்!

இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியிடம் கொள்ளையடித்த அடையாளம் தெரியாத நபர்கள்! 

ஆத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியிடம் ஆறு பவுன் தங்க நகையைத் திருடிச் சென்ற நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் தனது மனைவியுடன் தனியார் வங்கியில் 12 பவுன் தங்க நகைகளை அடமானம் வைப்பதற்காக எடுத்துச் சென்றுள்ளார். இதையடுத்து, ஆறு பவுன் தங்க நகைகளை மட்டும் அடமானம் வைத்துவிட்டு, 1 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணமும், மீதமுள்ள ஆறு பவுன் தங்க நகைகளையும் தனது இருசக்கர வாகனத்தில் எடுத்து வைத்துள்ளார். 

அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பணம் கீழே விழுந்து விட்டதாகக் கூறி, அவர்களைத் திசைத் திருப்பி, அவர்கள் வைத்திருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், சம்பவம் நிகழ்ந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.