ட்ரெண்டிங்

நாளை இந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது!-விரிவான தகவல்!

 

சேலம் மாவட்டம், அஸ்தம்பட்டி, தம்மம்பட்டி, தாரமங்கலம் ஆகிய துணை மின்நிலையங்களில் மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் நாளை (நவ.16) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. எங்கெங்கு மின் விநியோகம் இருக்காது? என்பது விரிவாகப் பார்ப்போம்!

 

அஸ்தம்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், அஸ்தம்பட்டி, காந்தி சாலை, வின்சென்ட், மரவனேரி, மணக்காடு, சின்ன திருப்பதி, ராமநாதபுரம், கன்னங்குறிச்சி, புது ஏரி, ஹவுசிங் போர்டு, கொல்லப்பட்டி, கோரிமேடு, கொண்டப்பநாயக்கன்பட்டி, ராமகிருஷ்ணா சாலை, அழகாபுரம், ராஜாராம் நகர், சங்கர் நகர், கம்பர் தெரு, பாரதி நகர், 4 ரோடு, மிட்டா பெரிய புதூர், சாரதா கல்லூரி சாலை, செட்டிச்சாவடி, விநாயகம்பட்டி, நகரமலை அடிவாரம், ஏற்காடு ஆகிய பகுதிகளில் நாளை (நவ.16) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

தம்மம்பட்டி துணை மின்நிலையத்தில் மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், தம்மம்பட்டி, ஜங்கமசமுத்திரம், கொண்டையம்பள்ளி, மூலப்புதூர், கோனேரிப்பட்டி, செந்தாரப்பட்டி, நாகியம்பட்டி, உலிபுரம், நாரைக்கிணறு, கீரிப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (நவ.16) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.  

 

தாரமங்கலம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், தாரமங்கலம், காடம்பட்டி, சிக்கம்பட்டி, தொளசம்பட்டி, அமரகுந்தி, அத்திராம்பட்டி, பவளத்தானூர், அத்திக்காட்டானூர், பெரியாம்பட்டி, எம்.செட்டிப்பட்டி, துட்டம்பட்டி, பாப்பம்பாடி, சின்னப்பம்பட்டி, சமுத்திரம், பூக்கார வட்டம், கருக்குப்பட்டி, வெள்ளாளபுரம், வெள்ளக்கல்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (நவ.16) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.