ட்ரெண்டிங்

காதில் பூ வைத்து கொண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் !!!

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட காந்திபுரம், கள்ளுக்கட்டு, பைத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர், 

அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் அனுபவத்தில் உள்ள நிலங்களுக்கு நிலப்பட்டா வழங்கக்கோரி வருவாய்த்துறையினரிடம் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதையடுத்து அங்குள்ள மலைவாழ் மக்கள் அனுபவித்து வரும் நிலத்திற்கு அனுபவ நிலப்பட்டாவை வழங்க மறுக்கும் வருவாய்த்துறையினரை கண்டித்து ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காதில் பூ வைத்து கொண்டு நூதன கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 30 பெண்கள் உட்பட 100 பேர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.