ட்ரெண்டிங்

சேலம் மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் நாளை மின்விநியோகம் இருக்காது?- விரிவான தகவல்!

சேலம் மாவட்டம், புத்திரகவுண்டன்பாளையம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், புத்திரகவுண்டன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், அபிநவம், எருமசமுத்திரம், சின்னமசமுத்திரம், வீரக்கவுண்டனூர், கல்யாணகிரி, காந்தி நகர், கல்லேரிப்பட்டி, தளவாய்ப்பட்டி, தென்னம்பிள்ளையூர், ஒட்டப்பட்டி, உமையாள்புரம், ஓலப்பாடி, ஆரியபாளையம், வைத்தியகவுண்டன்புதூர், பெரிய கிருஷ்ணாபுரம், முத்தானூர், படையாச்சியூர் ஆகிய பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 24) காலை 09.00 மணி முதல் 02.00  மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. 

வீரபாண்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், ஆட்டையாம்பட்டி, பாலம்பட்டி, வேலநத்தம், மருளையாம்பாளையம், பெத்தாம்பட்டி, ராஜாபாளையம், கூலிப்பட்டி, எட்டிமாணிக்கம்பட்டி, ராக்கிப்பட்டி, எஸ்.பாப்பாரப்பட்டி, சென்னகிரி, முத்தனம்பாளையம், ஏரிக்காடு, வீரபாண்டி, பாலம்பட்டி, கோணயநாயக்கனூர், அரசம்பாளையம், புதுப்பாளையம், வாணியம்பாடி, பைரோஜி, உத்தமசோழபுரம், அரியானூர், சீரகாபாடி, சித்தனேரி, வெண்ணந்தூர், நடுப்பட்டி, நாச்சிப்பட்டி, மின்னக்கல் ஆகிய பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 24) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.       

கே.ஆர்.தோப்பூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், அலையனூர், மாரமங்கலத்துப்பட்டி, கோணகாபாடி, காரைச்சாவடி, முத்துநாயக்கன்பட்டி, கலர்பட்டி, செம்மண்கூடல், பாகல்பட்டி, கே.ஆர்.தோப்பூர், அழகுசமுத்திரம், கருக்கல்வாடி, கிருஷ்ணம்புதூர், குயவனூர், கரியாம்பட்டி தோலூர், இரும்பாலை, மோகன் நகர், தெசவிளக்கு, மாட்டையாம்பட்டி, ஓம் சக்தி நகர் ஆகிய பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 24) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது .