ட்ரெண்டிங்

சேலத்தைச் சேர்ந்த இளைஞரை கைது செய்தது ஆந்திர காவல்துறை!

திருப்பதியில் அலிபிரி சோதனைச் சாவடியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள அலிபிரி சோதனைச் சாவடியில் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த ஆகஸ்ட் 15- ஆம் தேதி அன்று நண்பகலில் தொலைபேசியில் பேசிய நபர், அங்கு வெடிகுண்டு வெடிக்கும் எனவும், இதில் 100 பேராவது உயிரிழப்பார்கள் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். 

இதனையடுத்து, பாதுகாப்புக் குழுவினரும், வெடிகுண்டு நிபுணர்களும் சோதனையிட்ட போது, வெடிகுண்டு ஏதும் கிடைக்கவில்லை. இது பற்றிய புகாரில் விசாரணை நடத்திய திருமலை நகர காவல்துறையினர், தொலைபேசியில் மிரட்டியது சேலம் மாவட்டம், சாமிநாதபுரத்தைச் சேர்ந்த பாலாஜி என்பதைக் கண்டுபிடித்தனர். 

சேலம் மாவட்டத்திற்கு விரைந்த ஆந்திர காவல்துறையினர், பாலாஜியை கைது செய்து, ஆந்திர மாநிலத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.