ட்ரெண்டிங்

எடப்பாடி பழனிசாமி வீட்டின் முன்பு நாடும் நமதே நாற்பதும் நமதே என்ற சுவரொட்டிகள்!

பா.ஜ.க.- அ.தி.மு.க. இடையே கூட்டணி குறித்த சர்ச்சை நீடித்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி வீட்டின் முன்பாக அவரது ஆதரவாளர்கள் நாடும் நமதே நாற்பதும் நமதே என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

 

நாடாளுமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், தமிழகத்தில் பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி நீடிக்கிறதா? என்ற சர்ச்சை தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் பா.ஜ.க.வின் மூத்த நிர்வாகிகளை சந்திப்பதற்காக டெல்லி சென்றிருந்தனர்.

 

சந்திப்புக்கு பின் தமிழகம் திரும்பிய முன்னாள் அமைச்சர்கள், சேலத்தில் உள்ள கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதனிடையே, பா.ஜ.க. கூட்டணி இல்லாவிட்டாலும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. தயாராக உள்ளது என்பதை வெளிப்படுத்தும் விதமாக சேலத்தில் எடப்பாடி பழனிசாமி வீட்டின் முன்பாக நாடும் நமதே நாற்பதும் நமதே என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை அவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ளனர்.