ட்ரெண்டிங்

மூன்று மணி நேரம் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி அசத்திய 600 மாணவர்கள் !

உலக சாதனைகள் நிகழ்வுக்காக 1,500- க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். 

 

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உலக சாதனைகள் நிகழ்வுக்காக 1,500- க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். மாணவர்களுக்காக சிலம்பம், நடனம், ஓவியம் உள்ளிட்டப் போட்டிகள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன. சிலம்பம் போட்டியில் 500- க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடர்ச்சியாக, மூன்று மணி நேரம் சிலம்பம் சுற்றி அசத்தினர். 

 

100- க்கும் மேற்பட்ட மாணவர்கள் பரத நாட்டியம் ஆடியது காண்போரை வெகுவாகக் கவர்ந்தது. இதனை மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் நேரில் கண்டு ரசித்தனர்.