ட்ரெண்டிங்

76 மீட்டர் நீளம் கொண்ட பிரமாண்ட தேசிய கொடி அணிவகுப்பு பேரணி!

76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 76 மீட்டர் நீளம் கொண்ட பிரமாண்ட தேசிய கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. 

சேலம் மாவட்டம், மேச்சேரியை அடுத்த நங்கவள்ளியைச் சேர்ந்த நெசவாளர் செந்தில் குமார் என்பவர் தேசிய கொடியை தயாரித்து முன்னாள் முப்படை வீரர்களிடம் வழங்கினார். இதைத் தொடர்ந்து, தேசிய கொடியைப் பெற்றுக் கொண்ட வீரர்கள், அதனை கல்லூரி மாணவர்களிடம் ஒப்படைத்தனர். 

அவர்கள் அரசுப் பள்ளியில் இருந்து மேச்சேரி பேருந்து நிலையம் வழியாக, தேசிய கொடியுடன் பேரணியாகச் சென்றனர். இந்த பேரணியில் 100- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.