ட்ரெண்டிங்

தெடாவூர், மின்னாம்பள்ளி துணை மின்நிலையங்களுக்கு உட்பட்டப் பகுதிகளில் நாளை மின் விநியோகம் இ

சேலம் மாவட்டம், தெடாவூர் மற்றும் மின்னாம்பள்ளி ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் நாளை (செப்.19) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தெடாவூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், தெடாவூர், கெங்கவல்லி, ஆணையாம்பட்டி, புனல்வாசல், கிழக்கு ராஜாபாளையம், வீரகனூர், நடுவலூர், ஒதியத்தூர், பின்னனூர், லத்துவாடி, கணவாய்காடு ஆகிய பகுதிகளில் நாளை (செப்.19) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல், மின்னாம்பள்ளி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், கூட்டாத்துப்பட்டி, விளாம்பட்டி, ஏரி புதூர், நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, எஸ்.என்.மங்கலம், ஏ.என்.மங்கலம், ஜலகண்டாபுரம், அனுப்பூர், பூசாரிப்பட்டி, பாலப்பட்டி, தேங்கல்பாளையம், குள்ளம்பட்டி, காட்டூர், வலசையூர், குப்பனூர், தாதனூர், ஆச்சாங்குட்டப்பட்டி, வெள்ளியம்பட்டி, கத்திரிப்பட்டி, பூவனூர் ஆகிய பகுதிகளில் நாளை (செப்.19) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.