ட்ரெண்டிங்

அரசு கல்லூரியில் சேர மீண்டும் விண்ணப்பிக்கலாம்! 

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவ, மாணவிகள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடந்த மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வில் சுமார் 63% இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளதால், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மீண்டும் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். 

ஜூலை 3 முதல் ஜூலை 5- ஆம் தேதி வரை www.tngasa.in என்ற இணையதளம் மூலம் மாணவ, மாணவிகள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்; விண்ணப்பித்த மாணவர்களுக்கு வரும் ஜூலை 08- ஆம் தேதி முதல் கல்லூரிகளில் சேர நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாணவர்கள் கோரும் பாடப்பிரிவுக் காலியாக இருந்தால் கல்லூரி முதல்வர்களே முடிவெடுக்கலாம்; கல்லூரியில் உள்ள அனைத்து இடங்களும் நிரப்பப்பட வேண்டும் என கல்லூரி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.