விளையாட்டு

சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர்! 


உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சிங்கப்பூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் வரும் நவம்பர் 20 முதல் டிசம்பர் 15 வரை 14 சுற்றுகளாக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறவுள்ளதாக சர்வதேச செஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது. 

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான டிங் லிரனை சந்திக்கிறார் இந்திய செஸ் வீரர் குகேஷ். 

தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் சார்பில் சென்னையில் போட்டி நடத்த விண்ணப்பம் செய்யப்பட்டிருந்த நிலையில், சிங்கப்பூரில் போட்டி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.